-
Recent Posts
Archives
Categories
March 2023 M T W T F S S 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 Meta
Blogroll
Category Archives: Uncategorized
சிலந்தி
பொதுவாக மத்தியக்கிழக்கில் வீடுகளில் ஒட்டடை, சிலந்திப்பூச்சிகள் அதிகம் கண்களில் படுவதில்லை. அப்படியே பட்டாலும் வீடு சுத்தப் படுத்தும் சமயங்களில் சிலந்திகள் விரட்ட/கொல்லப்பட்டுவிடும். எங்கள் வீட்டிலும் அப்படியே. போனமாதத்தில் ஒரு நாள் குளியலறைச் சுவரோரம் முழங்கால் உயரத்தில் கருப்பாக ஒரு பூச்சி வலைபின்னுவதில் சுறுசுறுப்பாக இருக்க, நான் தண்ணீரை எடுத்து ஊற்றி விரட்டலாமென்ற திட்டத்தில் ஒரு டப்பாவில் … Continue reading
Posted in Uncategorized
Leave a comment
கூடன்குளம்
11-09-2012 அன்று ஆபிதீன் பக்கங்களில் கூடன்குளம் அணுமின் நிலைய எதிர்ப்புப் போராட்டம் பற்றிய பதிவில் பின்னூட்டமாக எழுதப்பட்ட எனது பார்வை, மீள்பதிவாக இங்கே: கூடன்குளம் அணு உலை அமைப்பது சரியா? அல்லது கூடன்குளம் அணு உலையை எதிர்ப்பது சரியா? எல்லோர் தலையயும் உருட்டிக்கொண்டிருக்கும் இந்தப் பிரச்சினையில் எந்தக் கேள்வி சரி என்று தெளிவிப்பதே மோதலுக்கு வழிவகுத்துவிடும் நிலையில், … Continue reading
Posted in Uncategorized
1 Comment
நாவல் எழுதுவது நாவல்பழம் தின்பது போன்றது
நாவல் எழுதுவது நாவல்பழம் தின்பதுபோன்றது – ஒரு எளிமையான ப்ளுப்பிரிண்ட் பின்நவீனத்துவ துவாரத்துல புதுசா மூக்கை நுழைக்கும் புது வாசகர்களுக்கு மட்டுமான ஒரு நிலைத்தகவலோடு தொடங்கலாம்: தமிழ்ல 3 வகை எழுத்தாளர்கள் இருக்காங்க. 1. தமிழ்ல எழுதுற தமிழ் எழுத்தாளர்களில் தமிழ்நாட்டுலயே பிரபலமா இருக்கிற 3 எழுத்தாளர்கள் 2. தமிழ்ல எழுதுற தமிழ் எழுத்தாளர்களில் தமிழ்நாட்டுல … Continue reading
Posted in அசைவம், Uncategorized
Leave a comment
எலி மருந்து.
சிறு வயதில் எங்கள் ஊர் வாரச்சந்தை எனக்கொரு ஃபேன்டஸி. அந்தக் கூட்டமும், அதில் தெரியும் உயிரியக்கமும், ஒருமாதிரி பரவசப்படுத்தும். வியாபாரிகளின் அழைப்புக்களும், அவர்களது பொருட்களின் பெருமைகளை பறைசாற்றும் வித்தியாசமான அடித்தொண்டை விளம்பரக் கதறல்களும், இன்னும் அமைதியே உருவான வயதான ஆண்/பெண் வியாபாரிகளின் இருக்கைகளும், இன்னபிற சண்டை சச்சரவுகளும், அன்றைக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய நிறையப் பொருட்களின் … Continue reading
Posted in Uncategorized
Leave a comment
ஒரே பொகைச்சல்
போன வியாழக்கிழமையன்னிக்கு, புகையிலை இல்லா தினமாம். அன்னிக்கு கிடைக்காதுன்னு மொதநாளே ரொம்பப்பேரு மொத்தமா சுருட்டெல்லாம் வாங்கிவச்சப்பொறம்தான் தெரிஞ்சிச்சாம், எல்லாம் நல்லாத்தேன் கெடச்சுச்சுன்னு – ரேடியோலயே சொன்னாஹல்ல? எங்க நானாவும் அன்னிக்கு வெள்ளச் சுருட்டு கெடைக்காம , அலை அலைன்னு (மொத்தம்ஒரு கடைதான்) அலஞ்சும் கிடைக்கலியாம். திரும்பி வந்தா, பக்கத்துல இருந்த பத்து கடைலயும் இருந்துச்சாம். அன்னிக்கு … Continue reading
Posted in Uncategorized
Leave a comment
ஒரு இசைப்பயணம் – மீள்பதிவு
ஒரு இசைப்பயணம் – மஜீத் ஆகஸ்ட் 30, 2010 இல் 12:02 மாலை (கஜல், மஜீத்) ரியாத்-இல் வெந்து கொண்டிருந்த நேரத்தில் உள் மனதில் “நாம் ரொம்ப புத்திசாலியாக்கும்”னு ஒரு குரல் கேட்டுக்கொண்டே இருக்கும். பின்னே? ஸ்கூல்ல ஃபர்ஸ்ட் மார்க்கெல்லாம் வாங்கிருக்கோம்ல? எம்புட்டு வாத்தியார்ங்கெல்லாம் ‘அப்பப்ப’ இவன் ரொம்ப புத்திசாலின்னு சொல்லக்கேட்டு அப்புடியே வானத்துல பறந்துருக்கோம்? … Continue reading
Posted in Uncategorized
Leave a comment
ஹாஜியார் ஜோக்
ஹாரிபிள் ஹஜரத் ஜோக்கைப் பதிவதற்கு முன் அதை ‘உன் பிளாக்லயே போடேன்யா’ என்ற ஆபிதீன் நானாவிடம், ஒரு ஆசை வார்த்தை சொன்னேன். இதைப் போட்டீங்கன்னா, ஒரு ஹாஜியார் ஜோக் இலவசம்னு. ஏமாறுவது அவருக்கு புதிதல்ல. ஆனால் ஏமாற்றுவது எனக்குப் பழக்கமல்லவே? அதனாலயே இப்ப அந்த ஹாஜியார் ஜோக் . இதையும் போட்டார்னா, ஒரு ‘மோதினார்’ ஜோக் … Continue reading
ஐந்து நிமிடக் காவியம்
சமீபத்தில் மூளைக்குள் நிஜப்பாதிப்பேற்படுத்திய, ‘ஈசன்’ படத்தில் வரும் “ஜில்லாவிட்டு” பாடலாக்கம், நேர்த்திக்கு ஒரு உதாரணம். முதல்தடவை பார்க்கும்போதே மோகன் ராஜனின் பாடல் வரிகளின் அர்த்தங்கள் உள்ளுக்குள் ஊடுருவுகின்றன. அப்பனின் அறியாமை காட்டும் தனிமனித அவலம்.கடமை கழிக்கும் பொருந்தாத் திருமணம் காட்டும் சமூக அவலம்.சொக்கனின் அலட்சியத்தால் கடவுளுக்கும் ஒரு குட்டு. இயலாக் கணவனையும் காக்கும் பெண்மையின் பொறுப்பும், அதனாலேயே … Continue reading
Posted in சினிமா, Uncategorized
3 Comments
ஆசியர்கள் Vs அரபிமொழி
இருப்பின் உண்மையை எதார்த்த எழுத்தில் ரசிக்கத் தேடும் சாதாரணன் நான் நம்ம லாலு பிரசாத் யாதவின் ஒரு சாதனையை யாராலும் மறக்க முடியாது. பலபத்தாண்டுகளாக நஷ்டத்தையே காதலித்துக்கொண்டிருந்த நமது ரயில்வேயை லாபத்திற்கு மணமுடித்த சூத்திரதாரி. பத்தாண்டுகளுக்கு மேல் கோலோச்சிய அவரது சொந்த மாநிலத்தில் இன்று ஓரங்கட்டப்பட்டுள்ளார். யாரால்? அதே ரயில்வேயை நிர்வகித்த அனுபவமும் கொண்ட நிதீஷ் … Continue reading
Posted in Uncategorized
2 Comments
மொளவுத்தண்ணி அல்லது ரசம் அல்லது புலியானம் அல்லது ரஜம்
இருப்பின் உண்மையை எதார்த்த எழுத்தில் ரசிக்கத் தேடும் சாதாரணன் நான் நாகூரில் விளைந்த முத்துக்களில் ஒருவரான அப்துல் கையும் அவர்களின் ஒரு பதிவான மொளவுத்தண்ணி மூக்கில் புரைஏற்றுகிறது. யாராவது நினைத்தால் புரை ஏறுமாம். எனக்கு புரையேறியதால் நினைவு பின்னோக்கி செல்கிறது!! அம்மாபட்டினம் கோட்டைப்பட்டினம் போன்ற இடங்களில் ரசம், புலியானம் என்றும் (அட புளியானம்தாங்க) விளங்கப்படுகிறது. அப்போதெல்லாம் … Continue reading
Posted in Uncategorized
Leave a comment